Monday, March 22, 2010

கூகுளும் சீனாவும் சமூக சுதந்திரமும்

கூகுளும் சீனாவும் சமூக சுதந்திரமும்
   
கூகுளுக்கும் சீனாவுக்கும் என்னதான் பிரச்சனை...?சமீப காலமாக செய்திகளில் கூகிள் தன்னுடைய சீனத்து செயல்பாடுகளை நிறுத்தி கொள்ள போகாதாக அடிக்கடி சொல்லப்பட்டு வந்த வேளையில் தற்போது அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது.


நேற்று முதல் கூகிள்.சின் என்ற இனைய முகவரியை கூகிள் நிறுத்திவிட்டது.அனைத்து கூகிள்.சின் பார்வையாளர்களும் இனி கூகுளின் ஹாங் காங் இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.  


பல நாட்களாக நடந்து வந்த பிரச்சனை ஒரு வழியாக முடிவிருக்கு வந்து விட்டது.இதன் தொடக்க புள்ளி, சீன அரசு கூகுளை தணிக்கை செய்த பிறகுதான், அதன் தேடல் முடிவுகளை சீனாவில் வெளியிட அனுமதிக்க முடியும் என்று சொல்லி கூகுளை தணிக்கை செய்ய தொடங்கியது.கூகிள் தணிக்கை செய்ய தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த பனிப் போர் நடந்து  வருகிறது.


சீனா ஏன் கூகுளை தணிக்கை செய்ய வேண்டும் ...? ஏனெனில் சீன அரசு அதன் மக்களை சுதந்திர பார்வையோடு வாழ வைக்க விரும்பியதே இல்லை.சீனாவின் இந்த அசுர வளர்ச்சி அதன் சர்வதிகார முதலாளித்து தத்துவங்களால் வந்ததே தவிர, உண்மையான ஜனநாயக கற்றை சுவாசித்து பெறப்பட்டதல்ல.


மேலும், சீனாவின் பணக்கார மற்றும் ஏழைகளின் விகிதம் மிகவும் மோசமானதாக வளர்ந்து விட்டது.சிவாஜியில் ரஜினி சொல்வது போல பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான் ஏழை மேலும் ஏழை ஆகிறான்.


இது அனைத்தையும் விட சீனாவின் மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்கு தெரியப்படாமல் மறைக்கப் படுகின்றன. இவ்வளவு கட்டுபாடுகள் பிரச்சனைகள் உள்ள சீனா கூகுளின் மூலம் இந்த உண்மைகள் சீனா மக்களுக்கும் உலகிற்கும் தெரிய வந்து விடுமோ என்று அஞ்சித்தான், கூகுளை தணிக்கை செய்து தன்னுடைய நாட்டில்  அனுமதித்தது .


அதே நேரத்தில், சீனாவில் உள்ள பல மனித உரிமை ஆர்வலர்களின் ஜிமெயில் அக்கௌன்ட் கள் திருட்டுதனமாக வேவு பார்க்கப்பட்டு வந்தன.இதை கூகிள் தனது அதிகாரபூர்வ ப்ளாகில் வெளியிட்டுள்ளது.இங்கிருந்துதான் பிரச்சனை பெரிதாகி விட்டது.


கூகிள் தனது சீனத்து செயல்பாடுகளை நிறுத்த போவதாக அறிவிக்க தொடங்கியது.
சீனாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரோ, ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடர்வதும், நிறுத்துவதும் அதை பொருத்தது.ஆனால், சீனாவில் செயல்படும் போது அது எங்களின் சட்ட திட்டங்களை பின்பற்றித்தான் செல்ல வேண்டும் என்று சொல்லி கூகுளின் அனைத்து செயல்பாடுகளும் கண்டிப்பாக தணிக்கை செய்யப்படும் என்று சொல்லிவிட்டார்.


இறுதியில் கூகிள் தனது வெளியேற்றத்தை நிறைவேற்றி விட்டது.


உலக மகா நிறுவனகளின் சீனா பற்றிய எண்ணங்கள் கண்டிப்பாக மாற தொடங்கி விட்டது.எவ்வளவு பெரிய முன்னேற்றமும் கட்டிபோடபட்ட சமூகத்திற்கு எந்த நன்மையும் கொடுக்க முடியாது.


நாட்டின் முன்னேற்றத்திற்கு, தனி மனித மற்றும் சமூக  சுதந்திரத்தை விலையாக கொடுப்பதை ஒரு போதும்  நினைத்து கூட பார்க்க முடியவில்லை.


நம்முடைய மிக பெரிய பலம் நம் சுதந்திரம் என்பதை நம்மால் உணரவே முடியாது.ஏனெனில் அடக்குமுறையை அனுபவிக்கதா வரையில் சுதந்திரத்தின் அருமை தெரிவதில்லை.





9 comments:

  1. வணக்கம் இந்துமதி.
    துணையெழுத்து வலைப்பூ உலகில் புதிய முயற்சி.
    வாருங்கள்.
    வாழி நலம் சூழ....
    --
    அன்பே சிவம்
    அஷ்வின்ஜி
    www.vedantavaibhavam.blogspot.com
    www.frutarians.blogspot.com
    ---------------------------------
    ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
    ---------------------------------

    ReplyDelete
  2. Follow Tamil news in TWITTER
    http://twitter.com/tamilhotnews

    ReplyDelete
  3. thank you very much for your lovely article ,keep it up

    ReplyDelete
  4. Very Nice article.
    "நம்முடைய மிக பெரிய பலம் நம் சுதந்திரம் என்பதை நம்மால் உணரவே முடியாது.ஏனெனில் அடக்குமுறையை அனுபவிக்கதா வரையில் சுதந்திரத்தின் அருமை தெரிவதில்லை"...

    Very True for Us

    ReplyDelete
  5. In China's point it is ok for their political leaders to censor google since it also lists lot of things against China. India is also being affected by this kind of google arrogance. It lists indian maps etc as disputed. No Indian politician or leader never even uttered any word against this or taken credible action. If a company is operating in a country means it has to obey the local law. Since google is an american company it doesnt mean that it can act like the World police (american government). Leave off the karuthu sudhandhiram or thagaval urimai. A law in a country is a law even if it is under communism, democracy or Sarvaadhigaaram. If you live there and want to make profit you need to obey it. Remember Google is not a social service organization. It is operating for mere Profits only and it will look only at the profit. and every american company needs to obey the american governments rules and laws, especially concerned with American Peoples Interests.

    ReplyDelete
  6. Thanks for your info, keep it up and keep sharing more Info.

    ReplyDelete
  7. In india there must some agency to censor media ,they are doing too much now a days.China should change its policy ,its not a loose for google.

    Visit my blog:http://porunaipayyan.blogspot.com

    ReplyDelete

Add-Tamil